திருக்குறளை தலைகீழாக எழுதிய டிரைவருக்கு சான்றிதழ்


திருக்குறளை தலைகீழாக எழுதிய டிரைவருக்கு சான்றிதழ்
x
தினத்தந்தி 16 July 2021 6:08 PM GMT (Updated: 16 July 2021 6:08 PM GMT)

திருக்குறளை தலைகீழாக எழுதிய டிரைவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

காரைக்குடி,

காரைக்குடி சோழன் புத்தக நிறுவனம் மற்றும் வள்ளுவர் பேரவை சார்பில் 24 மணி நேரத்தில் 1330 திருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்ச்சி நடந்தது. இதில் காரைக்குடியை அடுத்த நாட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் கார்த்தியமூர்த்தி கலந்து கொண்டார். இவர் 17 மணி நேரம் 19 நிமிடத்தில் இந்த சாதனையை செய்து முடித்தார். பின்னர் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வள்ளுவர் பேரவை நிறுவன தலைவர் செயம்கொண்டான் வரவேற்றார். பூதக்கண்ணாடி கல்வி மைய புரவலர் சேவியர்அந்தோணிராஜ், வள்ளுவர் பேரவை கவுரவ ஆலோசகர் சேவு.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிள்ளையார்பட்டி குபேரர் கோவில் அறங்காவலர் சுப.நாச்சியப்பன் தலைமை தாங்கி பாராட்டுரை வழங்கினார். சாதனை படைத்த கார் டிரைவர் கார்த்தியமூர்த்திக்கு வாழ்த்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர் நிமலன்நீலமேகம், பொதுச்செயலாளர் பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வள்ளுவர் பேரவை செயலாளர் பிரகாஷ்மணிமாறன் நன்றி கூறினார்.


Next Story