வேப்பந்தட்டை அருகே மீனவர் மர்ம சாவு


வேப்பந்தட்டை அருகே மீனவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 17 July 2021 7:45 PM GMT (Updated: 17 July 2021 7:49 PM GMT)

வேப்பந்தட்டை அருகே மீனவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் நேற்று தனது வயலுக்கு சென்றார். அப்போது அங்கு ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்தவரை பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் கிருஷ்ணாபுரம் மீனவர் தெருவை சேர்ந்த சுரேஷ்(வயது 35) என்பதும், மீனவரான இவர் மீன் வளர்க்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுரேசை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story