நாமக்கல் அருகே மோட்டார்சைக்கிள்- கார் மோதல்; டிரைவர் பலி


நாமக்கல் அருகே மோட்டார்சைக்கிள்- கார் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 18 July 2021 5:42 PM GMT (Updated: 18 July 2021 5:44 PM GMT)

நாமக்கல் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

நாமக்கல்,

திருச்சி மாவட்டம் எம்.புத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் குணசீலன் (வயது 25). சரக்கு வாகன டிரைவர். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் நாமக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். 
நல்லூர் அருகே வந்தபோது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரும், இவரது மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் குணசீலன் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். 
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story