மணல் திருடிய 2 பேர் கைது
மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி, ஜூலை
திருவாடானை தாலுகா, ஓரியூர் பாம்பாறு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக திருவாடானை மண்டல துணை வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்திய மண்டல துணை வட்டாட்சியர் சேதுராமன், மணல் திருடியது தொடர்பாக திருவெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 26), கோவிந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நாகநாதன் (56) ஆகிய இருவர் மீதும் புகார் அளித்தார். இது தொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story