செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 20 July 2021 11:05 AM GMT (Updated: 20 July 2021 11:05 AM GMT)

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக பதவி வகித்து வந்த பிரியா நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலராக மாற்றப்பட்ட நிலையில், சென்னை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலராக பதவி வகித்த மேனுவல்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட புதிய வருவாய் அலுவலராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு அலுவலக ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரிந்து வந்த இரா.மேனுவல்ராஜ் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மாவட்ட வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜுக்கு, வருவாய் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story