கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி


கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 20 July 2021 9:28 PM GMT (Updated: 20 July 2021 9:28 PM GMT)

கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள்.

கோவை

கோவை மாவட்டத்தில் நேற்று 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 283 ஆக உயர்ந்து உள்ளது. 

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது பெண், 70 வயது முதியவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 55 வயது பெண், 75 வயது பெண், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 65 வயது ஆண் என 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,140 ஆக உயர்ந்து உள்ளது. இதுதவிர கோவை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 328 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

இவர்களுடன் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 22 ஆயிரத்து 495 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 648 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story