14 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி வந்தது


14 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி வந்தது
x
தினத்தந்தி 21 July 2021 12:40 PM GMT (Updated: 21 July 2021 12:40 PM GMT)

திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 14 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி வந்தது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 14 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி வந்தது.
தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது பல்வேறு கட்டங்களாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என பல்வேறு பகுதிகளில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டது. சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 14 ஆயிரத்து 500 கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி டோஸ் நேற்று வந்தது.
பிரித்து அனுப்பும் பணி
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் சென்னையில் இருந்து சுகாதாரத்துறை மூலம் திருப்பூர் மாவட்டத்திற்கு 14 ஆயிரத்து 500 டோஸ்  கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி  ஒதுக்கப்பட்டது. இந்த தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும்.
தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும். இந்த தடுப்பூசி முடியும் தருவாயில் கூடுதலாக கேட்டு பெறப்படும். அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story