ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது


ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 21 July 2021 7:50 PM GMT (Updated: 21 July 2021 7:50 PM GMT)

ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

விருதுநகர்,
சிவகாசி அருகே வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக தென்காசி மாவட்டம் உமையதலைவன் பட்டியை சேர்ந்த சீனி பாண்டி (வயது 37) என்பவரை விருதுநகர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சீனி பாண்டி மீது விருதுநகர் மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்திலும் ரேஷன் அரிசி கடத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து சீனிபாண்டியை மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய விருதுநகர் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சீனிபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story