சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷத்தைெயாட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷத்தைெயாட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சுந்தரமகாலிங்கம் கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர்.
காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. உடல் பரிசோதனை மற்றும் கிருமி நாசினி கொண்டு பக்தர்கள் கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
சிறப்பு அபிஷேகம்
பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப்பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றனர்.
கோவில் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பக்தர்கள் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் மதியம் 11.30 மணிக்கு வனத்துறை கேட் மூடப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பிரதோஷத்தையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணி முதல் மாைல 6 மணி வரை பால், பழம், இளநீர் சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அடிப்படை வசதி
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரதோஷ வழிபாட்டில் தமிழகத்தில் இருந்து வருகை தந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story