நண்பரை பாட்டிலால் குத்தியவர் கைது


நண்பரை பாட்டிலால் குத்தியவர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 7:53 PM GMT (Updated: 21 July 2021 7:53 PM GMT)

ரத்தினபுரியில் நண்பரை பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

கோவை

ரத்தினபுரி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவருடைய நண்பர் பட்டேல் வீதியை சேர்ந்த மணிகண்டன் (45). சம்பவத்தன்று இருவரும் மதுஅருந்தியபோது தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் பாட்டிலால் கார்த்திக்கை குத்தினார். இதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி கண்டனை கைது செய்தனர்.


Next Story