5-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை


5-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
x
தினத்தந்தி 22 July 2021 9:54 PM GMT (Updated: 22 July 2021 9:54 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் 5-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 26 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 283 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 946 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,157 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 5-வது நாளாக நேற்றும் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story