புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை


புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 July 2021 8:38 PM GMT (Updated: 23 July 2021 8:38 PM GMT)

ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக இருதரப்பு உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

ஒரத்தநாடு;
ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதங்களில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக இருதரப்பு உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருமணம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஒக்கநாடு கீழையூர் மேலத்தெருவை சேர்ந்த பிச்சைக்கண்ணு. இவருைடய மகன் பார்த்திபன் (வயது33). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள வடுவூர் வடபாதியை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன்  மகள் இலக்கியா(27) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கணவன்- மனைவி  இடையே நேற்றுமுன்தினம் மாலை தகராறு ஏற்பட்டது. இதனால் உறவினர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து  பார்த்திபன் வீட்டிலிருந்த இலக்கியாவை உறவினர்கள் வடுவூரில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர்
தற்கொலை
இப்பிரச்சனை காரணமாக மன உளைச்சல் அடைந்த பார்த்திபன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு  சென்ற ஒரத்தநாடு போலீசார் பார்த்திபன் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இலக்கியா அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பார்த்திபனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்
 மோதல்
இந்தநிலையில் பார்த்திபன் உடலை உறவினர்கள் அவரது வீட்டுக்கு எடுத்து சென்று இறுதி சடங்கு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இலக்கியா அவரது உறவினர்களுடன் அங்கு வந்தார். இதனால் அங்கு இரு தரப்பு உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். எனவே  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story