தொழிலாளி அடித்துக்கொலை


தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 25 July 2021 7:30 PM GMT (Updated: 25 July 2021 7:30 PM GMT)

சிவகங்கையில் வீட்டின் முகப்பு ஓடுகளை மாட்டாததால் ஆத்திரம் அடைந்து ெதாழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வீட்டு உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை,

சிவகங்கையில் வீட்டின் முகப்பு ஓடுகளை மாட்டாததால் ஆத்திரம் அடைந்து ெதாழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வீட்டு உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அடித்துக்கொலை

சிவகங்கையை அடுத்த சோழபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40).இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னீர்செல்வம் சோழபுரத்தில் உள்ள லோகநாதன் (45) என்பவரின் வீட்டிற்கு ஓடுகளை மாட்டி கொடுத்தாராம். இதில் அவர் வீட்டின் முகப்பு ஓட்டை மாட்டவில்லையாம்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த லோகநாதன், பன்னீர்செல்வத்தை கம்பால் அடித்து உதைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த பன்னீர்செல்வம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

வலைவீச்சு

இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே வீட்டு உரிமையாளர் லோகநாதன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story