தூத்துக்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 11:11 AM GMT (Updated: 26 July 2021 11:11 AM GMT)

தூத்துக்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பயிர் காப்பீடு தொைகயை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நல்லையா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில் கர்நாடகா அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடடப்பட்ட யார்கோல் அணையை இடித்து அகற்ற வேண்டும், 2020-ம் ஆண்டு விடுபட்ட வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 2020, 2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நீர்நிலை, குளம், கால்வாய், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட உதவி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விளாத்திகுளம் தாலுகா தலைவர் பிச்சையா, ஓட்டப்பிடாரம் தாலுகாக செயலாளர் அசோக்குமார், தலைவர் கிருஷ்ணமுர்த்தி, ஸ்ரீவைகுண்டம் செயலாளர் சுப்புத்துரை, திருச்செந்தூர் தாலுகா தலைவர் நடேசஆதித்தன், செயலாளர் கோவிந்தன் மற்றும் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story