தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிற்ற 15 பேர் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில்  மதுவிற்ற 15 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2021 11:16 AM GMT (Updated: 26 July 2021 11:16 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் அனுதியின்றி மதுவிற்பனை செய்யப்படுகிறதா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி மாவட்டத்தில் 13 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுவிற்பனை செய்த 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்த 134 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story