சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது
நத்தம் அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நத்தம்:
நத்தம் அருகே மதுக்காரம்பட்டி பகுதியில், சேவல் சண்டை நடப்பதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு கணேஷ்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள மலையடிவார பகுதியில் 5 பேர் சேவல் சண்டை நடத்தி கொண்டிருந்தனர். இதனைக்கண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அப்பகுதியை சேர்ந்த நிர்மல் (வயது 19), அரவிந்த் (20), துரைப்பாண்டி (42), பாலாஜி (19), திலீப் (19) என்று தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story