விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 3:07 PM GMT (Updated: 26 July 2021 3:07 PM GMT)

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலுபாரதி தலைமை தாங்கினார்.

 இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ராஜாங்கம், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னச்சாமி, துணை செயலாளர் அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் யார்கோல் அணையை இடித்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். 

மேலும் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Next Story