வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 July 2021 4:55 PM GMT (Updated: 26 July 2021 4:55 PM GMT)

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரை மகன் அஜித்(வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்கச்சென்றார். 

பின்னர் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் முன்பு திடீரென தீயின் வெளிச்சம் தெரிந்ததை கண்டு சந்தேகம் அடைந்த அஜித் வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு மோட்டார் சைக்கிள்மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இருப்பினும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. 

இதுபற்றிய தகவல்அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் தானாக தீப்பிடித்து எரிந்ததா? அல்லது யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என்பதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் சு.பில்ராம்பட்டு கிராமத்தில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.


Next Story