கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 9:16 PM GMT (Updated: 26 July 2021 9:16 PM GMT)

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

திருச்சி
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. எனவே அதை கட்டுவதற்கு மத்திய அரசு அ னுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச்செயலாளர் இந்திரஜித் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் அயிலை சிவசூரியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story