அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
பரமக்குடி,
பரமக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் முறை தொடங்கி உள்ளது. இங்கு இளங்கலை படிப்பாக பி.காம், பி.பி.ஏ., பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.எஸ்சி.கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், உயிர் வேதியியல், பி.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ் ஆகிய படிப்புகளில் முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் WWW.tnga Sa.org மற்றும் WWW.tng asa.in என்ற இணையதளத்தில் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியின் எண் 1041009 என்பதில் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story