நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறப்பு


நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறப்பு
x
தினத்தந்தி 27 July 2021 8:27 PM GMT (Updated: 27 July 2021 8:27 PM GMT)

ஸ்ரீபுரந்தானில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறக்கப்படுகிறது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் கரீப் சாகுபடி பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில், உடையார்பாளையம் வட்டத்தில் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இன்று(புதன்கிழமை) முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நெல் கொள்முதல் நிலையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி ெவளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story