கொரோனாவுக்கு பெண் பலி


கொரோனாவுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 27 July 2021 8:28 PM GMT (Updated: 27 July 2021 8:28 PM GMT)

கொரோனாவுக்கு பெண் உயிரிழந்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11,445 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11,070 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 2 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ஒருவர், வேப்பூர் ஒன்றியத்தில் 2 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் ஒருவர் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 155 பேரில் 21 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 220 பேர் பலியாகி உள்ளனர். நேற்றைய அறிவிப்பின்படி கொரோனாவிற்கு பெரம்பலூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று வரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 200 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 15,173 பேருக்கு கோேவக்சின் தடுப்பூசியும் என மொத்தம் ஒரு லட்சத்து 66,373 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 1,749 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 13,910 யூனிட் கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story