சிறையில் சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு அறை ஒதுக்க நீதிபதி மறுப்பு


சிறையில் சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு அறை ஒதுக்க நீதிபதி மறுப்பு
x
தினத்தந்தி 28 July 2021 5:04 AM GMT (Updated: 28 July 2021 5:04 AM GMT)

சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு அறை ஒதுக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷணல் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது 3 போக்சோ வழக்குகள் உள்ள நிலையில் ஜாமீன் கேட்டு கடந்த வாரம் செங்கல்பட்டு கோர்ட்டில் சிவசங்கர் பாபா தரப்பில் அவரது வக்கீல் மனுதாக்கல் செய்திருந்தார். அப்போது அவருக்கு ஜாமீன் தர மறுத்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

சிறப்பு அறை

இதனையடுத்து சிறையில் உள்ள சிவசங்கர்பாபாவுக்கு சிறையில் சிறப்பு வகுப்பு அறை வழங்கக்கோரி செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் சிவசங்கர் பாபா தரப்பில் கடந்த 22-ந்தேதி மனு அளித்திருந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி சிறையில் சிறப்பு வகுப்பு அறையை வழங்க அனுமதி மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story