பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி


பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 28 July 2021 5:52 AM GMT (Updated: 28 July 2021 5:52 AM GMT)

பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தீர்த்தம்கரைபட்டு கிராமத்தில் உள்ள சேரன் தெருவை சேர்ந்தவர் ராகுல் (வயது 21). இவர் தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் சோழவரம் பகுதியில் உள்ள பூதூர் ஏரிக்கு குளிக்க சென்றார்.

இந்த ஏரியில் மண் எடுத்து பள்ளம் ஆழமாக இருந்ததில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் குளிக்க சென்ற ராகுல் நீண்ட நேரமாக கரை திரும்பவில்லை. இது குறித்து அவரது நண்பர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சாவு

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஏரியில் மூழ்கி சேற்றில் சிக்கி இறந்த ராகுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story