காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 368 பேர் தேர்வு


காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 368 பேர் தேர்வு
x
தினத்தந்தி 28 July 2021 6:17 PM GMT (Updated: 28 July 2021 6:17 PM GMT)

காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 368 பேர் தேர்வு

வேலூர்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்து வருகிறது. 3-வது நாளாக நேற்று உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள 506 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 87 பேர் பங்கேற்கவில்லை. கலந்து கொண்ட 419 பேரில், 51 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். 368 பேர் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கண்காணித்தார்.

Next Story