2 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்


2 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்
x
தினத்தந்தி 29 July 2021 6:49 PM GMT (Updated: 29 July 2021 6:49 PM GMT)

மண்டபம் அருகே 2 கிலோ கஞ்சா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

பனைக்குளம்,

 ராமநாதபுரம் மண்டபம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபக்சிவாச் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் நிறுத்தாமல் வேகமாக சென்ற காரை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது அந்த காரை ஓட்டிச் சென்ற நபர் மரைக்காயர் பட்டினம் அருகே உள்ள கியாஸ் குடோன் அருகே காரை நிறுத்திவிட்டு வேகமாக தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த காரின் பதிவு எண்ணை வைத்து இந்த கார் யாருக்கு சொந்தமானது காரை ஓட்டி வந்த நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story