அ.தி.மு.க.வை சேர்ந்த 35 பேர் மீது வழக்கு


அ.தி.மு.க.வை சேர்ந்த 35 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 July 2021 6:58 PM GMT (Updated: 29 July 2021 6:58 PM GMT)

இளையான்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.வை சேர்ந்த 35 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

இளையான்குடி,

 இளையான்குடி பஜாரில் அனுமதியின்றி கொரோனா கால விதிமுறைகளை மீறி, அரசுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் நாகூர் மீரா, (பொறுப்பு) மாவட்ட எம்.ஜி.ஆர் துணைச்செயலாளர் அப்துல் குலாம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் மலைச்சாமி உள்பட 35 பேர் மீது இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story