மயங்கி விழுந்த தொழிலாளி சாவு


மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 30 July 2021 8:51 PM GMT (Updated: 30 July 2021 8:51 PM GMT)

மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன்(வயது 45). கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று தா.பழூர் டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது, மேலத்தெருவில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அவரது மனைவி சித்ரா, அங்கு வந்து பார்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து சித்ரா, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story