14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்


14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 31 July 2021 4:41 PM GMT (Updated: 31 July 2021 4:41 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மாறுதல் செய்யப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விவரம் வருமாறு:-
சிங்கம்புணரியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ரத்தினவேலு சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக மாற்றப்பட்டார். ஏற்கனவே சிவகங்கையில் பணிபுரிந்த பழனியம்மாள் கண்ணங்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக மாற்றப்பட்டார். கண்ணங்குடியில் பணிபுரிந்த சரவணன் இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் மாற்றப்பட்டார்.இளையான்குடியில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ராஜேஸ்வரி சிவகங்கையில் உள்ள உதவி இயக்குனர் ஊராட்சிகள் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரிந்த பிரதீப் சிவகங்கையில் வட்டார வளர்ச்சி அலுவலர் விடுப்பு மற்றும் பயிற்சியாக மாற்றப்பட்டார்.

தேவகோட்டை

சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் விடுப்பு மற்றும் பயிற்சியாக பணிபுரிந்த திருநாவுக்கரசு கண்ணங்குடி கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார்.ஏற்கனவே அங்கு பணிபுரிந்த மாலதி தேவகோட்டை கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார்.
தேவகோட்டையில் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த சாந்தி இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த ஸ்ரீதர் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக மாற்றப்பட்டார்.
தேவகோட்டையில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர்  ஆக மாற்றப்பட்டார்.மேலும் சிங்கம்புணரியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக இருந்த பத்மநாபன் திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக மாற்றப்பட்டார்.

திருப்புவனம்

திருப்புவனத்தில் பணிபுரிந்த லட்சுமணராஜ் சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக மாற்றப்பட்டார். எஸ்.புதூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக பணிபுரிந்த நிர்மல்குமார் அங்கேயே கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த ஜெகநாதசுந்தரம் அங்கேயே வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக நியமிக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

Next Story