மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர் பலி


மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர் பலி
x
தினத்தந்தி 31 July 2021 6:33 PM GMT (Updated: 31 July 2021 6:33 PM GMT)

மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர் பலியானார்

வெள்ளியணை
வெள்ளியணை அருகே உள்ள மணவாடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 33). இவர் கரூரில் செயல்படும் தனியார் பஸ் கூண்டு கட்டும் நிறுவனத்தில் டைலராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளியணை பகுதி வெங்கடாபுரத்தில் மாமனார் வீட்டில் தங்கியிருந்த தனது மனைவியை பார்க்க குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு மனைவியுடன் தகராறு செய்துவிட்டு அதிகாலையில் மணவாடி வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது பாளையம் கரூர் சாலையில் செல்லாண்டிபட்டியை அடுத்துள்ள தாளியாபட்டி பிரிவு பகுதியில் தனியார் சிமெண்டு ஆலை ரெயில்வே பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்ததில் முருகேசன் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story