பெண் தற்கொலை


பெண் தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2021 7:21 PM GMT (Updated: 31 July 2021 7:21 PM GMT)

கல்லிடைக்குறிச்சி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 41). இவர் இதய நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், இருமுறை அறுவை சிகிச்சை செய்தும் நோய் குணமாகாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story