சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு


சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு
x
தினத்தந்தி 31 July 2021 7:51 PM GMT (Updated: 31 July 2021 7:51 PM GMT)

சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடை பெற்றது. இதையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் வடுக பைரவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி வடைமாலை மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பைரவாஸ்டகம் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அஷ்டமி வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். பக்தர்கள் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு செய்தனர்.

Next Story