இரு சக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு


இரு சக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 8:18 PM GMT (Updated: 3 Aug 2021 8:18 PM GMT)

இரு சக்கர வாகனத்தில் புகுந்த பாம்ைப பிடித்தனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை சவுண்டம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் மருத்துவர் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று புகுந்து விட்டதாக அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த கட்டு விரியன் பாம்பினை பிடித்து வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

Next Story