நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
x
தினத்தந்தி 5 Aug 2021 6:42 PM GMT (Updated: 5 Aug 2021 6:49 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர். இதனால் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 455 ஆக அதிகரித்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 453 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 455 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 47 ஆயிரத்து 421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 422 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,469 ஆக அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே நேற்று 46 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 46 ஆயிரத்து 451 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 563 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story