அ.தி.மு.க.- பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு


அ.தி.மு.க.- பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 9 Aug 2021 6:22 PM GMT (Updated: 9 Aug 2021 6:22 PM GMT)

அ.தி.மு.க.- பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடு புகார்கள் தெரிவித்து ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆண்டாள் (அ.தி.மு.க.), அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கவுன்சிலர்களான பாலசுப்பிரமணியன், சின்னச்சாமி, தமிழரசி, நாகலட்சுமி, பரணிதரன் ஆகியோர் தீர்மானங்களை நிராகரிப்பதாகக் கூறி ஊரட்சி ஒன்றிய ஆணையரிடம் மனுக்கொடுத்துவிட்டு தீர்மான புத்தகத்தில் கையொப்பமிடாமல் வெளிநடப்பு செய்தனர். 
மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி கரூர் மாவட்ட கலெக்டருக்கு கவுன்சிலர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

Next Story