ஒரே கிராமத்தில் 11 பேருக்கு டெங்கு - 3 பேருக்கு கொரோனா


ஒரே கிராமத்தில் 11 பேருக்கு டெங்கு - 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Aug 2021 8:44 PM GMT (Updated: 9 Aug 2021 8:44 PM GMT)

ஒரே கிராமத்தில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 3 பேருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பிலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மேலத்தெருவில் 39 பேருக்கு அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், 11 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 3 பேருக்கும்‌ கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சுகாதார துறையினர் அந்த கிராமத்தில் உள்ள 500 பேருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
செந்துறை‌ வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். செந்துறை தாசில்தார் குமரய்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் வீடு, வீடாக சென்று தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று கண்டறிந்து, அதனை அப்புறப்படுத்தி வருகின்றனர். அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் தற்போது அந்த கிராமத்தில் தொற்று குறைந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Next Story