4 பேருக்கு கொரோனா


4 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Aug 2021 10:54 AM GMT (Updated: 12 Aug 2021 10:54 AM GMT)

4 பேருக்கு கொரோனா

குன்னத்தூர்
குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி ஊராட்சியில்  ஊராட்சி நெசவாளர் காலனி பகுதியில் 7 வயது சிறுவன் உள்பட  4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள்  பெருந்துறை தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளியூரிலிருந்து தனது உறவினரை பார்க்க வெள்ளிரவெளி அருகே நெசவாளர் காலனிக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியை ஊராட்சி நிர்வாகம், வருவாய் துறையினர் தனிமைப்படுத்தப்பட்ட, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். 


Next Story