டெண்டர் படிவம் வழங்காததால் ஆத்திரம்: அ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியல் வல்லத்தில் பரபரப்பு


டெண்டர் படிவம் வழங்காததால் ஆத்திரம்: அ.தி.மு.க., பா.ம.க.வினர் சாலை மறியல் வல்லத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Aug 2021 5:00 PM GMT (Updated: 12 Aug 2021 5:00 PM GMT)

சாலை மறியல்

செஞ்சி, 

வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது நிதியிலிருந்து ரூ.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் செய்வதற்காக நேற்று டெண்டர் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று அனைத்து கட்சியினரும் வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குவிந்தனர்.
அப்போது அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வினருக்கு டெண்டர் படிவம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கு பணியில் இருந்த ஒன்றிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, திடீரென அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். ஆனால் அதற்குள் டெண்டர் போடுவதற்கான நேரம் முடிந்து விட்டது. இதையடுத்து அ.தி.மு.க., பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story