கர்நாடகத்தில் புதிதாக 1,857 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 1,857 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Aug 2021 9:18 PM GMT (Updated: 12 Aug 2021 9:18 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்து உள்ளது. புதிதாக 1,857 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்து உள்ளது. புதிதாக 1,857 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பரிசோதனைகள்

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 275 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,857 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 24 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் 30 பேர் உயிரிழந்தனர்.

இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,950 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 65 ஆயிரத்து 67 ஆக அதிகரித்துள்ளது. 22 ஆயிரத்து 728 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

30 பேர் சாவு

பெங்களூரு நகரில் 321 பேர், தட்சிண கன்னடாவில் 475 பேர், மைசூருவில் 116 பேர், உடுப்பியில் 191 பேர், சிக்கமகளூருவில் 107 பேர், துமகூருவில் 34 பேர், சிவமொக்காவில் 50 பேர், குடகில் 93 பேர், ஹாசனில் 123 உள்பட 1,857 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
பெங்களூரு நகர், தட்சிண கன்னடாவில் தலா 5 பேரும், கோலாரில் 3 பேரும், பெலகாவி, சித்ரதுர்கா, ஹாசன், சிவமொக்கா, துமுகூருவில் தலா 2 பேர் என மொத்தம் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story