அரசு ஊழியர் தற்கொலை


அரசு ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 16 Aug 2021 2:19 PM GMT (Updated: 16 Aug 2021 2:19 PM GMT)

வேடசந்தூர் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேடசந்தூர் :

வேடசந்தூர் அருகே உள்ள குட்டத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 60). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் குட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மனைவியும், 2 மகன்களும் சென்னையில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் வீட்டில் காளியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story