கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 16 Aug 2021 7:44 PM GMT (Updated: 16 Aug 2021 7:44 PM GMT)

கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியாகினர்.

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று 57 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 73,550 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 726 பேர் உள்ளனர். 73 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 71,837 ஆகும். கொரோனாவுக்கு நேற்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 64 வயது மூதாட்டி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 69 வயது முதியவர் ஆகிய 2 ேபர் உயிரிழந்தனர். அந்தவகையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 987 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story