பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலி


பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலி
x
தினத்தந்தி 16 Aug 2021 7:49 PM GMT (Updated: 16 Aug 2021 7:49 PM GMT)

பஸ்சில் இருந்து தவறி விழுந்து கண்டக்டர் பலியானார்.

நெல்லை:

நெல்லை டவுன் காவல் பிறை தெருவை சேர்ந்தவர் மூக்கையா (வயது 53). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பாளையங்கோட்டை மகாராஜநகர் ரவுண்டானா பகுதியில் பஸ்சில் சென்று கொண்டிருந்த போது, மூக்கையா திடீரென்று பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story