கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்


கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்
x
தினத்தந்தி 18 Aug 2021 4:24 AM GMT (Updated: 18 Aug 2021 4:24 AM GMT)

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீ்ர்செல்வம் அறிவிப்பு.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் எஸ்.பாலமுருகன் கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story