ஏற்காட்டில் மரம் விழுந்து சிறுவன் பலி
மரம் விழுந்து சிறுவன் பலியானான்.
ஏற்காடு
ஏற்காடு மஞ்சகுட்டை பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் குபேந்திரன் (வயது 9), அங்குள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை சக சிறுவர்களுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது பலத்த காற்று வீசியது. இதில் சவுக்கை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் குபேந்திரன் மீது அந்த மரம் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். தகவல் அறிந்த ஏற்காடு இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story