குண்டர் சட்டம் பாய்ந்தது


குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 20 Aug 2021 5:32 PM GMT (Updated: 20 Aug 2021 5:32 PM GMT)

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம், 
பேரையூர் அருகே உள்ளது எட்டிசேரி. இந்த ஊர் டாஸ்மாக் மதுக்கடையில் கடந்த மாதம் நள்ளிரவில் கடையை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் ரூ.52 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து மதுக்கடை மேற்பார்வையாளர் இருளாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் பேரையூர் போலீசார் வழக்குபதிவு செய்து பம்மனேந்தலை சேர்ந்த முருகன் மகன் தர்மராஜன் என்ற காந்திவேலன் (வயது29), எருமைகுளம் ராமர் மகன் காளிராஜ் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்கு மற்றும் போலீசாரை தாக்கி செல்போன் பறித்த வழக்கு ஆகியவை உள்ளது. தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் மேற்கண்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மாவட்ட கலெக்டர் சந்திரகலா மேற்கண்ட 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி 2 பேரையும் பேரையூர் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story