கொரோனாவுக்கு முதியவர் பலி


கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 20 Aug 2021 5:51 PM GMT (Updated: 20 Aug 2021 5:51 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு முதியவர் பலியானார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 44,447 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 346 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 43,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 352 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செஞ்சி அருகே கவரை கிராமத்தைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது.

32 பேருக்கு தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44,479 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 43,779 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story