தொழிலாளி திடீர் சாவு


தொழிலாளி திடீர் சாவு
x
தினத்தந்தி 21 Aug 2021 6:56 PM GMT (Updated: 21 Aug 2021 6:56 PM GMT)

நெல்லை அருகே தொழிலாளி திடீரென்று இறந்தார்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மேலப்பாளையம் குறிச்சி பகுதிக்கு சென்றிருந்தார்.

அப்போது, அவர் திடீரென்று அங்குள்ள சாலையோரத்தில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர், முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story