விற்பனைக்காக சாராயம் வைத்திருந்தவர் மீது வழக்கு
விற்பனைக்காக சாராயம் வைத்திருந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தலைமையிலான போலீசார் வாரியங்காவல், தேவனூர், வடக்கு புதுக்குடி ஆகிய இடங்களில் மது மற்றும் சாராயம் விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களில் எவரேனும் ஈடுபடுகின்றனரா? என்று கண்காணித்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் புதுக்குடி கிராமத்தில் சிவகுமார் என்பவரது வீட்டின் பின்புறம் விற்பனைக்காக பிளாஸ்டிக் கேனில் சுமார் ஒரு லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. அதனை முகர்ந்து பார்த்தபோது நெடியுடன், துர்நாற்றம் வீசியது. மேலும் அதை குடித்தால் மனித உயிருக்கு தீங்கு ஏற்படும் என்பதால், அதனை கைப்பற்றி கீழே கொட்டி அழிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகுமார் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story