வேலூர் சரகத்தில் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


வேலூர் சரகத்தில் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 27 Aug 2021 4:30 PM GMT (Updated: 27 Aug 2021 4:30 PM GMT)

வேலூர் சரகத்தில் பணியாற்றி வரும் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. பாபு உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்

வேலூர் சரகத்தில் பணியாற்றி வரும் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. பாபு உத்தரவிட்டுள்ளார்.

இடமாற்றம்

வேலூர் சரகத்தில் பணியாற்றி வரும் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கடலாடியில் பணியாற்றி வரும் மங்கையர்கரசி ஜோலார்பேட்டைக்கும், அங்கு பணியாற்றி வரும் லட்சுமி குடியாத்தம் டவுனுக்கும், ராணிப்பேட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பணியாற்றி வரும் யுவராணி உமராபாத்துக்கும், அங்கு பணியாற்றி வரும் நிர்மலா குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றி வரும் நந்தினிதேவி பெரணமல்லூருக்கும், தேசூரில் பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் ஆம்பூர் தாலுகாவுக்கும், அரக்கோணம் டவுனில் பணியாற்றி வரும் முரளிதரன் கடலாடிக்கும், வேட்டவலத்தில் பணியாற்றி வரும் நிலவழகன் வேலூர் தாலுகாவுக்கும் மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை

 திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் நந்தகுமார் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றி வரும் சாலமோன்ராஜா கண்ணமங்கலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல காவேரிப்பாக்கத்தில் பணியாற்றி வரும் மகாலட்சுமி ராணிப்பேட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், லத்தேரியில் பணியாற்றி வரும் கவிதா போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றி வரும் திருநாவுக்கரசு சோளிங்கருக்கும், அங்கு பணியாற்றி வரும் ஜெயபிரகாஷ் போளூருக்கும் மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.

 வேலூர் தாலுகாவில் பணியாற்றி வரும் அல்லிராணி ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றி வரும் சாஜின் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் கலையரசி செய்யாறு மதுவிலக்கு அமலாக்கபிரிவுக்கும், போளூரில் பணியாற்றி வரும் கோவிந்தசாமி பாணாவரத்துக்கும், வேலூர் மாவட்ட சிறப்பு குற்ற தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் கவிதா திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணம்

மேலும், அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் புனிதா போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வரும் பிரகாஷ் கந்திலிக்கும், அரக்கோணம் தாலுகாவில் பணியாற்றி வரும் கோகுல்ராஜன் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்துக்கும், கந்திலியில் பணியாற்றி வரும் மணிமாறன் காவேரிப்பாக்கத்துக்கும், பாணாவரத்தில் பணியாற்றி வரும் லட்சுமிபதி கீழ்பென்னாத்தூருக்கும், திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் நாகராஜன் வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும், கீழ்பென்னாத்தூரில் பணியாற்றி வரும் சியாமளா வேலூர் தெற்கு குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி.பாபு பிறப்பித்துள்ளார்.

Next Story