நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Aug 2021 4:59 PM GMT (Updated: 27 Aug 2021 5:01 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 48,576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 2 பேரின் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,578 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று மேலும் 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,626 ஆக உயர்ந்தது. நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 45 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
ஒருவர் பலி
இதனிடையே நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 466 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்தது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 47,601 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 558 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story